காஞ்சிபுரம் அருகே வடக்குப்பட்டு அகழாய்வில் தங்க அணிகலன்கள் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

காஞ்சிபுரம் அருகே வடக்குப்பட்டு அகழாய்வில் தங்க அணிகலன்கள் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம், செப். 26- காஞ்சிபுரம் மாவட்டம் வடக் குப்பட்டு கிராமத்தில் மூன்று மாதங்கள் நடை பெற்ற முதற்கட்ட தொல் லியல் ஆய்வில் தங்க அணிகலன்கள் உள் ளிட்ட பழங்கால வரலா றுகளை தெரிந்து கொள் ளும் பல்வேறு தொல்லி யல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்துள் ளன. 

இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் விரி வான 2ஆ-ம் கட்ட ஆய்வை நடத்த மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட் டம் சிறீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் வடக் குப்பட்டு கிராமப் பகுதி யில் தொல்லியல் தடயங் கள் இருந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 3-ஆம் தேதி முதல்கட்ட அகழ்வா ராய்ச்சி பணிகளை மத் திய தொல்லியல் துறை தொடங்கியது. முதல் மூன்று மாதங்கள் ஆரம் பக் கட்ட ஆய்வை மட் டுமே நடத்த திட்டமிடப் பட்டது.

ஆனால் அங்கு நடை பெற்று வரும் அகழ்வா ராய்ச்சியில் தொல்லியல் துறையினரே எதிர்பா ராத வகையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதனைத் தொடந்து இந்தப் பகு தியை தொல்லியல் முக் கியத்துவம் வாய்ந்த பகுதி யாக அறிவித்து ஆராய்ச் சியை விரிவுபடுத்த தொல் லியல் துறை திட்டமிட்டு உள்ளது.

தற்போது 100 அடி அகலம், 100 அடி நீளத் துக்கு மட்டுமே ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளி முத்து தலைமையிலான அதிகாரிகள் இந்தப் பணி களில் ஈடுபட்டு வருகின் றனர்.

இந்த இடத்தில் தோண்டத் தொடங்கிய சில நாள்களிலேயே பழங் கால கட்டட அமைப்பு ஒன்று கிடைக்கப்பெற் றது. பழைய கற்களை பயன்படுத்தி இந்தக் கட் டடம் கட்டப்பட்டுள் ளது. இந்தக் கட்டடம் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதனைத் சுற்றி பள்ளங் கள் தோண்டியபோது பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செம்புக்காசு, பானையோ டுகள், கண்ணாடிப் பொருட் கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட் டன.

தங்கக் காதணிகள்

இதனைத் தொடர்ந்து அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டபோது ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள், ரவுலட் ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருள் கள் கிடைத்துள்ளன. தற் போது 1.6 கிராம் எடை கொண்ட இரு தங்கக் காதணிகள் கிடைத் துள்ளன. இவை 2 ஆயி ரம் ஆண்டுகளுக்கு முற் பட்டதாக இருக்கலாம் என்று தொல்லியல் துறை யினர் தெரிவித்துள்ளனர். இதன் காலத்தை துல்லி யமாக கணிக்க ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்தப் பகுதியில் வர லாற்றுக்கு முந்தைய காலக் கட்டத்தில் வாழ்ந்த மக்க ளின் தொல்லியல் தடயங் களும், வரலாற்றின் தொடக்க காலத்தில் மக் கள் வாழ்ந்தபோது பயன் படுத்திய கருவிகளும் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியை தொல் லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மத்திய தொல்லியல் துறை வரையறுத்துள்ளது. 3 மாதங்கள் நடைபெற்ற முதல்கட்ட ஆய்விலேயே பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைத்த தைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் 2-ஆம் கட்ட ஆய்வை விரிவுபடுத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை வட்டார தொல்லியல் துறை கண் காணிப்பாளர் காளி முத்து கூறும்போது, “பல் வேறு தொல்லியல் முக்கி யத்துவம் வாய்ந்த பொருள் கள் இங்கு கிடைத்துள் ளன. பழங்கால தங்க அணிகலன்கள் இரண்டு கிடைத்துள்ளன. இந்த இடம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். இந்தப் பகுதியில் ஆய்வை விரிவு படுத்த திட்டமிட்டுள் ளோம். தொடர்ந்து இந் தப் பகுதியில் கூடுதல் பரப்பில் விரிவான ஆய்வு நடைபெறும்” என்றார்.

No comments:

Post a Comment