மதப் பெயர்கள், சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

மதப் பெயர்கள், சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு

 புதுடில்லி, செப். 6- மதப் பெயர் கள் மற்றும் சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன் படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச ஷியா முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத் தலைவர் சையது வசீம் ரிஸ்வி உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று (5.9.2022) விசார ணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கு ரை ஞர் கவுரவ் பாட்டியா ஆஜரானார். அவர் வாதிடுகையில், “1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் வகையில் அரசியல் கட்சி களின் பெயர்களும் அவற் றின் சின்னங்களும் உள் ளன. சில கட்சிகள் தங் கள் கொடிகளில் பிறை நிலவு மற்றும் நட்சத்தி ரங் களை கொண்டுள்ளன. மதப் பெயரைக் கொண்ட ஒரு கட்சியின் வேட்பா ளர் வாக்கு கோருவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் மதச்சார் பின்மையை மீறுவது ஆகும்.

அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகள் தங் கள் பெயர்களில் முஸ்லிம் என்ற பெயரைக் கொண் டுள்ளன. மேலும் பல கட்சிகள் மதப் பெயர் களை கொண்டுள்ளன. இது நாட்டின் மதச்சார் பின்மைக்கு எதிரானது” என்றார்.

இதற்கு, “இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் (அய்யு எம்எல்), இந்து ஏக்தா தளம் போன்ற கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றனவா?” என்று நீதிபதி எம்.ஆர்.ஷா கேள்வி எழுப்பினார்.இதற்கு வழக்குரைஞர் பாட்டியா, “அய்யுஎம்எல் கட்சி கேர ளாவில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதி களை மீறுவதாக உள் ளது” என்றார்.

இதையடுத்து இந்த மனுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தாக்கீது அனுப்ப நீதி பதிகள் உத்தரவிட்டனர். மேலும் மதப் பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தும் கட்சிக ளையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அக்டோ பர் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மதப் பெயரைக் கொண்ட ஒரு கட்சியின் வேட்பாளர் வாக்கு கோருவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் மதச்சார்பின்மையை மீறுவது ஆகும். அங்கீகரிக் கப்பட்ட 2 அரசியல் கட் சிகள் தங்கள் பெயர்களில் முஸ்லிம் என்ற பெயரைக் கொண்டுள்ளன.

No comments:

Post a Comment