விடுதலை மணி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை அரசு மருத்துவமனைக்கு உடல் கொடை அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

விடுதலை மணி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை அரசு மருத்துவமனைக்கு உடல் கொடை அளிப்பு

திண்டுக்கல், செப். 24- திண்டுக் கல் மாவட்டம், சின்னா ளப்பட்டியைச் சேர்ந்த ‘விடுதலை’ மணி என்ற சுப்பிரமணி (வயது 91) 10.09.22 அன்று காலை 4.00 மணியளவில் மறை வுற்றார். 

மறைந்த விடுதலை மணி அவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். சுப்பிரமணி தந்தை பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு மிகவும் நெருக் கமான தோழர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களால் ‘மனித நேயர்’ என்று அழைக்கப்பட்ட வர். கழகம் அறிவிக்கும் அனைத்துப் போராட் டங்கள், ஆர்ப்பாட்டங் கள், பொதுக்கூட்ட உள் பட அனைத்து நிகழ்ச்சிக ளிலும் தள்ளாத வயதி லும் கலந்துகொள்பவர், விடுதலை மணி அவர்க ளுக்கு புத்தாண்டு என் பது தந்தை பெரியார் பிறந்த நாளே. அவர் தினமும் நாட்குறிப்பு எழுதும்போது தந்தை பெரியார் ஆண்டு என்று தான் எழுதுவார். கழக வெளியீடுகள் விற்பனை மிகவும் ஆர்வத்துடன் விற்பனை செய்வார். அரு கில் உள்ள மாவட்டங்க ளுக்கு புததக சந்தை நடை பெற்றால் உடனே அங்கு சென்று புத்தக விற்பனை செய்வார். புத்தகங்கள் மூலம்தான் கொள்கை களை மக்களுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும் என்று அடிக்கடி கூறுவார்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரால் 1967இல் கடவுள் மறுப்பு கொள்கை வெளியிடப் பட்ட விடயபுரம் பயிற்சி முகாமில் கலந்துகொண் டுள்ளார். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போராட் டங்கள் ஆர்ப்பாட்டங் கள் தொடர்பன புகைப் படங்கள் வைத்துள்ளார். விடுதலை மணி அவர்க ளின் மகன் மற்றும் மகள் களுக்கு தந்தை பெரியார் அவர்கள் பெயர் சூட்டி உள்ளார். பேரன், பேத் திக்கு தமிழக தலைவர் ஆசிரியர் அவர்கள் பெயர் சூட்டியுள்ளார்.

விடுதலையை  அவர்க ளின் மறைவு கழகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு ஆகும். மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம் தலைமையில் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மதுரை அ. முருகானந்தம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் இரா. நல்லதம்பி, மதுரை மண் டல தலைவர் கா, சிவகுரு நாதன், பீபீகுளம் சுரேஷ், திண்டுக்கல் மண்டல தலைவர் மு. நாகராஜன் திராவிட தொழிலாளர் கழக பேரவைத் தலைவர் அ. மோகன், துணைத் தலைவர் மு. செல்வம், மாவட்ட அமைப்பாளர் பழ. இராசேந்திரன், நக ரத் தலைவர் அ. மாணிக் கம், செயலாளர் த. கரு ணாநிதி, மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் நா. கமல்குமார், இரா. சுரேஷ், இன்னாளவட்டி கா. நாகேந்திரன், பூக் கடை இராமசாமி, வத் தலக்குண்டு ஏ.ஏ. முத்து, காஞ்சித்துரை, காட் டாறு குழுவை சேர்ந்த தாமரைக்கண்ணன் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைந்த விடுதலை மணி அவர்கள் உடல் எவ்வித மூடசடங்கும் செய்யாமல் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு கொடை வழங்கப்பட் டது. அதற்கான ஏற்பாடு களை மாநில ப.க. துணைத் தலைவர் கா. நல்லதம்பி செய்து கொடுத்தார்.

No comments:

Post a Comment