டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மூன்றாவது அணி இல்லை, நிதிஷ் குமார் அறிவிப்பு.
* எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்த இதுவே தருணம், சரத் பவார் கருத்து.
* நிதிஷ்குமார், லாலுபிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்திட ஆலோசனை.
* பாஜகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் விலகி விட்டன. அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என தேஜஸ்வி பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மனித நேயம், சமூக நீதி இவை இரண்டும் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைக் கூறுகள் என கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாநாட்டில் காணொலி வழியே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேச்சு.
தி டெலிகிராப்:
* விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசுவதில்லை. ஏழைகளின் வலி ராஜாவிற்கு தெரியாது என ராகுல் காந்தி நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
* இந்து ஆய்வுகள் பாடத்திட்டம் பார்ப்பன கொள்கைகளை நிலைநிறுத்துகிறது என பேராசிரியர் ரணபீர் சக்ரவர்த்தி கூறுகிறார்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment