சென்னை, செப். 13- சென்னை இலக்கியச் சங்கமும், சென்னை பல்கலைக் கழ கத்தின் ஆங்கிலத் துறை யும் இணைந்து சென்னை இலக்கியச் சங்கத்தின் 8ஆம் ஆண்டு இலக்கிய விழாவினை சென்னைப் பல்கலைக் கழகத்தில் 12.9.2022 அன்று நடத்தியது.
இந்நிகழ்வில் சென் னைப் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.கவுரி முதன்மை வகித்தார். தென்சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் முனை வர் தமிழச்சி தங்கபாண் டியன் சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்று பேசி னார். சிறப்பு விருந்தின ராக எத்திராஜ் கல்லூரி யின் தலைவர் வி.எம்.முரளிதரன் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் சென்னை இலக்கிய சங்கத்தின் தலைவர் என்.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். இச்சங்கத்தின் செயலா ளர் சையது ஹூசைன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஆம்ஸ்ட் ராங், சென்னை இலக்கிய சங்கத்தின் நிறுவனர் கோ.ஒளிவண்ணன் மற்றும் இணை நிறுவனர் லதா ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். பல்வேறு கல்லூரி மாண வர்களும், பேராசிரியர் களும் இந்நிகழ்வில் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment