Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
விளிம்புநிலை மக்களுக்குச் சாதகமாக அமையும் என்பதால் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்! மக்களவையில் டி.என்.வி.செந்தில்குமார்
August 07, 2022 • Viduthalai

புதுடில்லி, ஆக. 7- நாடாளு மன்ற மக்களவை விவா தத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் பே சியதா வது:

தி.மு.க. ஆட்சி வருவ தற்கு முன்பு 1967க்கு முன் தமிழ்நாட்டில் கிராமத் தில் உள்ள 10விழுக்காடு நில உரிமையாளர்களை 90 விழுக்காடு நிலமற்ற மக்கள் சார்ந்து வாழ்ந்த நிலை இருந்தது . இதே நிலை நாடு முழுவதும் இருந்தது. அக்காலகட்ட த்தில் அதிகபட்சமாக 110 நாட்கள் தான் விவசாயம் சார்ந்த வேலை இருக்கும் அப்போது கிடைக்கும் பொருளை வைத்து மீதமுள்ள 225 நாட்களை கடத்துவதும் மக்கள் நிலம் வைத்திருப்பவர்களி டம் உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலைக்குக் கார ணமாக இருந்தது. 

மக்களின் நிலையை கவனித்த கலைஞர் அவர்கள் 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழ கத்தை உருவாக்கி நியாய விலைக் கடைகள் மூலம் பொது விநியோக முறை யின் கீழ் மக்களுக்கு உணவு தானிய பொருட்களை வழங்குவது இக்கழகத் தின் பொறுப்பு. இப்போ து உணவு தேவை மானி யம் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உணவுக்காக மற் றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைமை வரக் கூடாது என்று சுயமரி யாதை அடித்தளத்தை வைத்து இத்திட்டத்தை கொண்டு வந்தார். இவற் றைத்தான் இந்தியா முழுவதும் செயல்படுத்த முன்மாதிரியாக அமைந் துள்ளது. 

மக்கள் நலனை பேணி காத்தது திராவிடம் ஆன தால் இவை திராவிடக் கொள்கையால் சாத்திய மாக்கப்பட்டது. சமத்து வம் மற்றும் சுயமரியாதை நிறுவப்பட்டது. இந்த நரேந்திர மோடி அரசு எப்படி இருக்கிறது என் றால் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் மற்றும் தயிர் பொருட் களின் குறிப்பாக குழந்தை களுக்கு அதிகம் தேவைப் படும் பால் போன்ற பொருட்களின் மீது ஜி. எஸ்.டி. வரி உயர்த்தப்பட் டுள்ளது. ஆனால் அரசு ஒரு பொருள் மீது வரியை உயர்த்தினால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அந்த பொருள் மாட்டு கோமியம் அவற் றுக்கு உச்­சபட்ச ஜி.எஸ்.டி. வரியை கூட விதித்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் அத் தியாவசிய பொருட் களின் விலையை அதிக ரிக்க வேண்டும். 

தேர்தல் வந்தால் எரி பொருளின் உயர்வில்லா மல் பார்த்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வுடன் விலையை மீண்டும் படிப்படியாக அதிகரிக் கிறார்கள் . இத்தகைய நடைமுறையை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் தான் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் திராவிட மாடல் விளிம்பு நிலை தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் இதே சமயம் நரேந்திர மோடி அரசாங் கம் கார்ப்பரே ட் நிறுவ னங்களுக்கு மட்டுமே சாத கமாக அமைகிறது.  -இவ் வாறு அவர் பேசினார். 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn