Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மேகேதாட்டுவில் அணை கட்ட கருநாடகாவை அனுமதிப்பதற்கு ஒன்றிய அரசு முடிவு எடுத்திருக்கிறதா? மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி
August 07, 2022 • Viduthalai

புதுடில்லி, ஆக. 7- விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் பின்வரும் வினாக்களை எழுப்பியிருந்தார்: 

(அ) மேகேதாட்டுவில் அணை கட்ட கருநாட காவை அனுமதிப்பதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் முடிவு எடுத்திருக்கிறதா? அப்படியானால், இது தொடர்பான ஒன்றிய அரசின் பார்வை/கருத் துடன் அதன் விவரங்க ளைத் தருக;  

 (ஆ) காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தின் சமீபத்திய கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த வினாக்களுக்கு நீர் வளத்துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு பின்வருமாறு பதில ளித்துள்ளார்: 

மேகேதாட்டு  நீர்த் தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டம், கருநாடகாவின் சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற் கான "கொள்கை அள விலான" அனுமதி பெறுவ தற்காக மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப் பிக்கப்பட்டது.  திட்ட ஆணையத்தால் (கருநா டக அரசு) டிபிஆர் தயா ரிப்பதற்கு சில நிபந்தனை களுக்குட்பட்டு 'கொள்கை அளவிலான' அனுமதியை வழங்கியது: 

“ மாண்புமிகு உச்ச நீதி மன்றத்தால் மாற்றிய மைக்கப்பட்ட காவிரி நதிநீர்ப் பிரச்சனை தீர்ப் பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக் கொள்வது இதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கும்” எனத் தெரிவிக் கப்பட்டது. 

அதன்பிறகு, மேகே தாட்டு  நீர்த்தேக்கம் மற் றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) கருநாடக அரசால் ஜனவரி 2019 சமர்ப்பிக்கப்பட்டது. நகல்கள்  அனுப்பப்பட் டன.  பல்வேறு கூட்டங் களின் போது மேகே தாட்டு  நீர்த்தேக்கம் மற் றும் குடிநீர் திட்டத்தின் மீது விவாதிப்பதற்கு அது  நிகழ்ச்சி நிரலில் சேர்க் கப்பட்டது.  இருப்பினும், சம்பந்தப்பட்ட மாநிலங் களுக்கு இடையே ஒரு மித்த கருத்து இல்லாத தால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடை பெறவில்லை.

பின்னர், 11.02.2022 அன்று நடைபெற்ற 15 ஆவது கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவைக் கருத் தில் கொண்டு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத் தின் சட்ட ஆலோசனை பெறப்பட்டு தெரிவிக்கப் பட்டது.

22.07.2022 அன்று நடைபெற்ற 16 ஆவது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு  நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டம் பற்றிய விவாதம் மீண்டும் சேர்க் கப்பட்டது.ஆனால், மேகேதாட்டு அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை“ இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

மேகேதாட்டுவில் அணைகட்டுவது தொடர் பாக ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன என் பதை அமைச்சர் நேரடி யாகத் தெரிவிக்கவில்லை. அமைச்சரின் மழுப்ப லான பதில் ஒன்றிய அரசு கருநாடகாவுக்கு மறை முக ஆதரவு அளித்துவரு கிறது என்ற குற்றச் சாட்டை மெய்ப்பிப்ப தாக இருக்கிறது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn