Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தமிழ்நாட்டில் உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? ஒன்றிய இரயில்வே அமைச்சரிடம் வைகோ கேள்வி
August 07, 2022 • Viduthalai

புதுடில்லி, ஆக. 7- தமிழ்நாட் டில் உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகள் எப் போது இரட்டைப் பாதை களாக மாறும்? என்று மாநிலங்களவையில் ஒன் றிய இரயில்வேத் துறை அமைச்சரை நோக்கி மதி முக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி னார். அதன் விவரம் வரு மாறு,

கேள்வி

(அ) ஒற்றை வழிப் பாதைகளின் காரணமாக நாள்தோறும் 15 முதல் 45 நிமிடங்கள் வரை இரயில்கள் தாமதமாக வரு கின்றனவா? தமிழ்நாட் டில் பல்வேறு இரயில்வே கோட்டங்களில் உள்ள ஒற்றை வழிப் பாதைக ளின் எண்ணிக்கையைக் கண்டறிய இரயில்வே ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தியதா?

(ஆ) அப்படிப்பட்ட இரயில் நிலையங்களில், குடிநீர் வசதிகள், வாகன நிறுத்துமிடம் இல்லாமை, சுகாதாரமற்ற கழிவறை கள், போதிய பணியாளர் கள் இல்லாதது போன்ற அடிப்படைக் கட்டமைப் புப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா?

(இ) அவ்வாறாயின், நிலைமையை மேம்படுத் துவதற்கும், எதிர்காலத் தில் இரட்டைப் பாதையை உருவாக்குவதற்கும் எடுக் கப்பட்ட நடவடிக்கைக ளின் விவரங்கள் என்ன?

வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விக ளுக்கு ரயில்வே அமைச் சர் அகுவினி வைஷ்ணவ் அவர்கள் 29.07.2022 அன்று அளித்துள்ள பதில்:-

(அ) ஒற்றை வழிப் பாதைப் பிரிவுகளில் இயக்கப்படும் இரயில்கள் உட்பட இந்திய இரயில்வேயில் உள்ள இரயில்கள், அனுமதிக் கப்பட்ட வேகத்தில் பட் டியலிடப்பட்டு, அதற்கேற்ப இரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இரயில்களின் ஒற்றைப் பாதை என்பது காரணமாக இருக்க முடி யாது.

(ஆ) நாடு முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்குவது ரயில் வேயின் முயற்சியாகும். தேவையை நிறைவு செய்ய தமிழ்நாட்டின் ஒற்றை வழி இரயில் பாதைகள் உட்பட அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்க போது மான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.

தேவை மற்றும் அனு சரணையின் அடிப்படை யில் மேலே உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகளில் சாத்தியமான அனைத்து இடங்களிலும் வாகனங் கள் நிறுத்துவதற்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறைகள் முறையா கச் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரமாகப் பராமரிக் கப்படுகிறது. தமிழ்நாட் டில் உள்ள இரயில் பாதைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

(இ) இரயில்வே திட் டங்கள் பல்வேறு மாநில எல்லைகளில் பரவி இருப்பதால், இரயில்வே திட்டங்கள் மண்டல வாரியாக ஒப்புதல் கொடுத்து எடுக்கப்படு கின்றன. திட்டங்களின் வருமானம், நெரிசலான மற்றும் நிறைவுற்ற பாதை களின் அதிகரிப்பு, இரயில்வேயின் சொந்த செயல் பாட்டுத் தேவை, வள ஆதாரங்களின் இருப்பு, ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் திட் டம் மற்றும் ஒட்டுமொத்த நிதி ஆதாரம் ஆகியவற் றின் அடிப்படையில் இரட் டைப் பாதை அமைக் கப்படுகிறது.

01.04.2022 நிலவரப் படி, தமிழ்நாட்டில், முழுமையாக அல்லது பகுதியாக 14190 கோடி ரூபாய் செலவில் மொத் தம் 1234 கிமீ நீளமுள்ள 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் இரயில்வே ஒப்புதலுடன் செயல்பட இருக்கிறது.

-இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn