டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
எதிர்க்கட்சிகள் விரும்பினால், நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளர் ஆவார் என அய்க்கிய ஜனதா தளம் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
2024 நாடாளுமன்றத் தேர்தலில் புனே தொகுதிக்கு மகாராட்டிர பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸூக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அகில இந்திய பார்ப்பன சங்கம், ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் - மோடிக்குப் பிறகு பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட விருப்பம் என தகவல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
‘பொதுத்துறை வங்கிகளை அவசர கதியில் தனியார் மயமாக்குவது ஆபத்துக்கு வழிவகுக்கும்’ என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், ‘பெரு மளவு வங்கிகளை அவசர கதியில் தனியார் மயமாக்குவது நல்லதற்கு பதிலாக தீய விளைவுகளை ஏற்படுத்தும், என குறிப்பிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
உ.பி.யில் யோகி தலைமையிலான பாஜகவின் காட்டாட்சி நடைபெறுகிறது என்கிறார் மாயாவதி.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment