பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர் வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர் வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் முதலிடம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து மாநில அளவில்  இணைய வழியிலான வினாடி வினாப் போட்டியை பன்னாட்டு இளைஞர் நாளான 12.08.2022 அன்று நடத்தின.

தமிழ்நாட்டிலுள்ள கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளிலிருந்து பல்வேறு மாணவர்கள் பங்கு கொண்ட இப்போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இள நிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவர் து. சந்தோஷ் பங்கு கொண்டு குறைந்த வினாடிகளில் துரிதமாக விடை யளித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரியின் நிர்வாகத்தி னர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பதிவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர். முதலிடம் பிடித்த மாணவர் சந்தோஷ் அவர்களுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் அமேசான் வழங்கும் பரிசுத் தொகை ரூபாய் 1,000/- அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment