ஆண்டிமடம் தனலட்சுமி அம்மையார் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

ஆண்டிமடம் தனலட்சுமி அம்மையார் படத்திறப்பு

சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு

ஆண்டிமடம், ஆக. 19- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் க.கலியமூர்த்தியின் வாழ்வி ணையரும், அரியலூர் மாவட்ட செய லாளர் க.சிந்தனைச் செல்வன் (எ) வேல் முருகன், தலைமை ஆசிரியர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் விஜயா மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி கேயன் ஆகியோரின் தாயாருமான தனலட்சுமி அம்மையார் 30.7.2022 அன்று காலை 8 மணிக்கு மறைவுற்றார். 

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க. சொ.க.கண்ணன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் உள்ளிட்ட கழகப் பொறுப் பாளர்களும், தி.மு.க பொறுப்பாளர் களும் இறுதி மரியாதை செலுத்தி எந்தவித மூடச் சடங்குகளுமின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

படத்திறப்பு

அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி14. 8.2022 ஞாயிறு காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க. சிந்தனைச்செல்வன் வர வேற்புரையாற்றினார். அம்மையாரின் வாழ்விணையர் க. கலியமூர்த்தி, மகள் கள் க.சாந்தி, க.விஜயா, மருமகன்கள் கோ.பாண்டியன், கா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலை மையேற்று தனலட்சுமி அம்மையாரின் படத்தினை திறந்து வைத்துவாழ்வியல் உரையாற்றினார்.ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ.க. கண் ணன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் திருச்சி கே.சவுந்தரராஜன்மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம்,மண்டல தலைவர் இரா கோவிந்தராஜன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தர்மதுரை, மாவட்ட ப.க.தலைவர் தங்க சிவமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் , வடலூர் புலவர் சு.ராவணன், அம் மையாரின் பேரன் பா.விவேக் ஆகி யோர் நினைவுரை வாழ்வியல் உரை யாற்றியபின்னர் அம்மையாருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட இ.அ.செயலாளர்க. கார்த்திகேயன் நன்றி கூறினார். 

பங்கேற்றோர்

மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர்இரா திலீபன், மாவட்டத் துணைச் செயலாளர் மா சங்கர், மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வீரா.விஷ்ணு, ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் துரை. பிரபாகரன், செந் துறை ஒன்றிய தலைவர் மு.முத் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், பொன்பரப்பி சுந்தரவடிவேல்,.தா.பழூர் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செய லாளர் பி. வெங்கடாசலம், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், இலக்கியச் செல்வி, அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் நசெல்ல முத்து, மறவனூர் மதியழகன், திருமா னூர் ஒன்றிய தலைவர் க.சிற்றரசு, ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட தொழி லாளரணி செயலாளர் வெ. இளவரசன், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப் பாளர் இரா.இராசேந்திரன், மீன் சுருட்டி தொழிலதிபர் ராஜா அசோகன், சேக்கிழார், ரஞ்சித் குமார், மண்டல மாணவர் கழகச் செயலாளர் எஸ்.எஸ். திராவிடச் செல்வன், தென் தமிழன், ஆண்டிமடம் ஒன்றிய துணைத் தலைவர் இரா.எ.இராமகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் த.கு. பன்னீர்செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரா. பாலமுருகன், இளைஞரணி தலைவர் வல்லம் வே.செந்தில், ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே. அண்ணாமலை, நகர தலைவர் சுந்தரம், சிலம்பூர் ராமச்சந்திரன், பிச்சமுத்து ஆசிரியர், ப.சுந்தரமூர்த்தி, ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் வை.செல்வராஜ், நகர செயலாளர் கே.எம்.சேகர், ஒன்றிய அமைப்பாளர் லெ. அர்ஜுனன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கா.பெரியார் செல்வன் பத்திரிகையாளர் கா.எழிலரசன் திமுக விளந்தை, ஒன்றியக் குழு உறுப்பினர் கே.டி.ஆர்.பத்மநாபன், அ.இ.அ.தி.மு.க மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரீடு.செல்வம், மருத்துவர்கள் ஆர்.விருத்தகிரி, பா.ராஜா, ஆண்டி மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய ராமன், ஆண்டிமடம் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பிரமுகர்களும், தோழர்களும், உறவினர் களும் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment