புலவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஊக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

புலவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஊக்கம்

அரியலூர், ஆக. 19- திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி அவர்கள்  தனது தந்தையார் புலவர் அண்ணா மலை பிறந்தநாளை (15.08.2022) முன்னிட்டு அரியலூர் மாவட்டத் தில் தனது சொந்த கிராமமான வெள்ளூரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார்.

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் 447 பெற்ற ஏ.சுபாஷ்க்கு 5000, இரண்டாம் மதிப்பெண் 432 பெற்ற ப.கலை வாணி 3000, மூன்றாம் மதிப்பெண் 414 பெற்ற அ.முருகஏசு 2000, மற்றும் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டி னார். மேலும் பெரியார்1000 போட்டித் தேர்வு எழுதும் 75 மாணவர்களுக்கான தேர்வுக் கட் டணத்தை தானே செலுத்துவதாக அறிவித்து அதற்குரிய  3750 கட்டணத்தை அரியலூர் ஒன்றிய கழக செயலாளர் கோபாலகிருஷ் ணன் அவர்களிடம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத் தலைவர் இளவழகன், சேலம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் தமிழர் தலைவர், மகளிர் அணி கண்ணகி மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களும் ஊர் பெரியோர் களும் மாணவர்களும் பெருமள வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment