Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கூட்டாட்சிக்கு சவாலாக ஒன்றிய அரசா? ‘பொதுப்பட்டியல் குறித்து விவாதிக்க வேண்டும்’ -கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
August 11, 2022 • Viduthalai

புதுடில்லி, ஆக. 11- கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஒன்றிய அரசு  சவாலாக இருக்கக் கூடாது என்றும், பொதுப்  பட்டிய லில் உள்ள பிரச்சினைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண் டும் என்றும் கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் கூறினார். அவர் கூறியதாவது:

குடியரசுத்தலைவர் மாளிகையில் கலாச்சார மய்யத்தில் பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிட்டி ஆயோக்கின் 7ஆவது ஆட் சிக்குழு கூட்டத்தில்  கேரள முதலமைச்சர் உரையாற்றி னார். 

“மாநிலப் பட்டியலில் உள்ள பிரச்சினைகள் குறித்து சட்டம் இயற்றுவதைத் தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு பகுதி தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சட்ட ரீதியான தீர்வுகாண வேண் டும். அரசமைப்பின் 11 மற் றும் 12 ஆவது அட்டவணை யில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விசயங்களையும் உள்ளாட்சி அமைப்புகளி டம் ஒப்படைத்துள்ள கேரளா, அதிகாரப் பரவலாக்கத்தில் முன்னணியில் உள்ளது. மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை வழங்கும்போது இதையும் பரிசீலிக்க வேண் டும்.  நகர்ப்புற மற்றும் கிரா மப்புற திட்டங்களுக்கு பிஎம் ஏஒய் ஒதுக்கீட்டை அதிக ரிக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதும் கருத்தில் கொள்ள வேண்டிய காரணி. கேரளத்தின் போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். விபத்துகளை குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளை மேம்படுத்தவும் கேரளாவின் விமான, ரயில் திட்டங்களுக்கு  உடனடி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். 590 கி.மீ நீள கடற்கரை யைக் கொண்ட கேரளாவில் கனமழையால் மண் அரிப்பு அதிகரிக்கிறது. கடலோர பாதுகாப்பு நடவடிக்கை களை மேம்படுத்த தொழில் நுட்ப மற்றும் நிதி உதவி தேவை. மீனவர்களை கடுமை யாக பாதிக்கும் மண்ணெண் ணெய் ஒதுக்கீட்டை குறைத் ததை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தென்னையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களை உற்பத்தி செய்வதற்கும், திசு வளர்ப்பு தென்னை நாற் றுகளை உற்பத்தி செய்வதற் கும் வணிகமயமாக்குவதற்கும் ஒன்றிய அரசிடம் இருந்து தேவையான ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டு நிதி உதவி இருக்க வேண்டும்; பாமாயில் உற்பத்தியில் முன் னணியில் உள்ள கேரளாவில் ஒரே ஒரு பதப்படுத்தும் பிரிவு மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க, புதிய பதப்படுத்தும் ஆலை கள் தொடங்கவும், தொழில் நுட்பம் மற்றும் நிதியுதவியும் வழங்க  வேண்டும். நிலக் கடலை உற்பத்திக்கு தொழில் நுட்ப பொருளாதார உதவி வழங்க வேண்டும்.

கோவிட்டுக்கு பிந்தைய பொருளாதார சூழ்நிலையில் இருந்து கேரளா மீளவில்லை என்பதால் கேரளாவின் கடன் வரம்பை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஜனநாயகம்,  அரச மைப்பு விழுமியங்கள், மதச் சார்பின்மை மற்றும் அறிவியல் விழிப்புணர்வு ஆகிய வற்றை கல்வியின் மூலம் மாணவர்கள் உள்வாங்க வேண்டும் என்பதே அரசின் பார்வை. உயர் கல்வியில் அதிக சேர்க்கையையும் தரத் தையும் கேரள அரசு நோக் கமாகக் கொண்டுள்ளது. அனைவருக்கும் முழுமை யான கல்வி என்ற கருத்தை தனியார் கல்வியால் செயல் படுத்த முடியாது. மாநிலத் தின்     கே-போன் திட்டம் கல் வியில் டிஜிட்டல் இடை வெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள் ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் ஆகிய வற்றில் கேரளா அமைத் துள்ள விரிவான மாதிரியை மற்ற மாநிலங்களும் பின் பற்றலாம்.

-இவ்வாறு கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

நிட்டி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர் சுமன் பெர்ரி மற்றும் சிஇஓ பரமேஸ் வரன் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு இந்த  முதல் சந்திப்பை நடத்தினர். ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன், வெளியுற வுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், உணவு மற்றும்  பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ்  கோயல், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் கவுன்சில் கூட் டத்தில் பங்கேற்றனர்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn