கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பது, தனிநபர் சுதந்திரத்திற்கு இடை யூறாக பார்க்கப் படுகிறது. அதே நேரம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பும் முக்கியம்.
இந்த இடைவெளியை நிரப்ப வருகிறது 'இயர்அய்ஓ' கருவி. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இக்கருவி, ஒருவரது முகத்தை சோனார் எனப்படும் ஒலி அலைகளால் வருடி, அதை துல்லியமான 'டிஜிட்டல் அவதார்' ஆக திரையில் காட்டும்.
இந்தக் கருவியை எந்த ஹெட்செட்டுடனும் இணைக்கலாம். இதன், ஒலிபெருக்கிகள், செவி உணரா ஒலி அலைகளை எதிராளி முகம் நோக்கி செலுத்தும். அது எதிரொலிக்கையில், இயர்அய்ஓவின் மைக்ரோபோன்கள் அதை வாங்கி, படமாக மாற்றும். இது மெட்டாவெர்ஸ், மெய்நிகர் துறைகளுக்கும் மிகவும் ஏற்றது.
No comments:
Post a Comment