88 ஆண்டுகள் எதிர்நீச்சலிட்டு நம்மைக் காக்கும் நாளேடாம் ‘விடுதலை'யின் 60 ஆண்டு கால ஆசிரியர் என்னும் சிறப்புக்குரிய நம் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், திராவிடர் கழகம் உருவான நாளான ஆகஸ்ட் 27 அன்று 60.000 சந்தாக்களை வழங்கிடுவோம் என்னும் முனைப் போடு கருஞ்சட்டைப் பட்டாளம் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறது.
கல்வித் துறையை நாசமாக்கி சமூகநீதியைப் பறிக்க முயலும் கூட்டத்துக்கு எதிர்நின்று போராடும் விடுதலை ஏட்டை இன்னும் பரவலாக்க வேண்டியது திராவிட மாணவர்களாகிய நம் கடமையல்லவா? புறப்படுவோம். அவரவர் படிக்கும் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நம் பெற்றோர், நண்பர்களின் பெற்றோர் என ஒவ்வொருவரும் குறைந்தது 5 சந்தாக்களேனும் திரட்ட முடியாதா, என்ன?
பொழுதுபோக்கு ஏடு அல்ல; நம் வருங்காலத்திற்கான பாதையை வகுக்கும் ஏடன்றோ விடுதலை! அதற்கு நாம் தானே பலம் சேர்க்க வேண்டும்.
இலக்கை அடைய இன்னும் மூன்று வாரங்களே இடையில்!
விரைவோம்!!
- ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர்)
இரா.செந்தூர்பாண்டியன் (மாநில அமைப்பாளர்)
No comments:
Post a Comment