கருநாடகத்தில் கொள்கைக் குன்றம் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

கருநாடகத்தில் கொள்கைக் குன்றம் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

பெங்களூர், ஆக. 18- பெங்களூரு சிட்டி தொடர்வண்டி நிலையத்தில் 8.8.2022 அன்று காலை 10.50 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கொட்டும் தொடர் மழையில் கொள்கை முழக்கமிட்டு பிரமிப்பூட்டும் வரவேற்பு கருநாடக மாநில திராவிடர் கழகத்தால் வழங்கப்பட்டது.

கருநாடக மாநிலத் தலைவர் மு.ஜானகி ராமன் தலைமையில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். சென்னை - சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை தே.இரா.வீரபத்திரன்,  மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ,  மாநில அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

ஓசூர் மாவட்டத் தலைவர் த.வனவேந்தன், மாநில துணைத் தலைவர் 102 அகவையாளர் நாடக செம்மல் பெரியார் வீ.மு.வேலு, பு.ரா.கஜபதி, திருச்சி காட்டூர் கிளை அமைப்பாளர் கனகராசு, கழக பொருளாளர் நாடக செம்மல் கு.செயக்கிருட்டிணன், தங்க வயல் கிளை தலைவர் கிருபாநிதி, கழக வடக்கு மண்டலச் செயலாளர் வி.வரதராசன் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். வடக்கு மண்டலத் தலைவர் இள.பழனிவேல் அமுதபாண்டியன், சக்கரவர்த்தி, அனந்தபுரம் கிளை செயலளர் மு.புட்பராசன், தலைவர் குணசேகரன், பின்னி மில் ஆலை பகுதி தலைவர் ஆட்டோ பாஸ்கர், கோரமங்களா கிளை தலைவர் அரங்கநாதன், கரிகால்வளவன் ஆகியோர் வரவேற்றனர்.

கருநாடக மாநில வழக்குரைஞர் பிரிவு தலைவர்குணவேந்தன் பயனாடை அணிவித்தார். பொன்னியின் செல்வம், தங்கவயல் அறிவழகன், நிர்மலா, தயாமணி, பயனாடைகள் அணிவித்து வரவேற்றனர். ஏராளமான தொடர்வண்டி பயணிகள் தலைவருடன் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

திடீர் என ஏற்பட்ட பனி மூட்ட மழையிலும், தமிழர் தலைவர் சிட்டி தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து இறங்கியதும். கழக தோழர்களும் பொதுமக்களும் மகிழ்ந்தனர்.   கழகத் தோழர்கள் பதாகைகள் பலவற்றை ஏந்தியும், கொள்கை அடையாளமான கழக கொடியுடன்பெரும் முழக்கமிட்டு வரவேற்றனர். நாடக செம்மல் வீ.மு.வேலு தலைவருக்கு பயனாடை அணிவித்தார். ஏராளமான கழகத் தோழர்கள் தொடர் வண்டி நிலையத்தில் பயனாடை அணிவித்து வரவேற்றனர். 102 அகவை நிறைந்த வீ.மு.வேலு அவர்களுக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். கழகத் தோழர்கள் கையொலி எழுப்பி மகிழ்வை வெளிப்படுத்தியது சிறப்பாக இருந்தது.

No comments:

Post a Comment