சென்னை, ஆக. 11- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஒன்றிய அரசின் மருத்து வம் மற்றும் குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில், செவிலியர் காலிப் பணியிடங்களுக்காக 2022, ஜூலை 13 ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்வ தற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.
அதன்படி 21.07.2022 முதல் 11.08.2022 அன்று வரை இணையதளத்தில் விண்ணப் பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் 28.07.2022 ஆம் தேதிக்குப் பிறகு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி தேர்வு மய்யங்களை திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செவிலியர்கள் தேர்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்து உள்ளது.
எனவே ஒன்றிய அரசால் முடக்கப்பட்டுள்ள இணைய தள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் தேர்வு எழுதும் மய்யங் களை இணையதளத்தில் உட னடியாக இணைக்கும்படி ஒன் றிய அரசை வலியுறுத்துகின் றேன். -இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment