Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பா.ஜ.க.வுக்கு எதிராக போராடத் தயாராகுங்கள்! காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள்
August 11, 2022 • Viduthalai

பெங்களூரு, ஆக. 11- கருநாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி யின் சார்பில் வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சி பெங் களூரு குயின்ஸ் சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவ லகத்தில் 9.8.2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலை வர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது சித்தராமையா பேசியதாவது:- 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் காந்தியார், வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டார். அதே நாள் "செய் அல்லது செத்து மடி" என்றும் சுதந்திர போராட் டக்காரர்களுக்கு காந்தியார் வேண்டுகோள் விடுத்தார். 

அப்போது ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை ஆங்கிலேய காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்.எஸ்.எஸ். 1925ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. ஆனால் சுதந்திரத் திற்காக நடைபெற்ற எந்த போராட்டத்திலும் அந்த அமைப்பினர் பங்கேற்று சிறைக்கு செல்லவில்லை.

இப்போது பா.ஜனதாவி னர் ஹர்கர் திரங்கா இயக் கத்தை நடத்துகிறார்கள். இந் திய தேசிய கொடியை, ஆர். எஸ்.எஸ். தலைவர்கள் எதிர்த் தனர். 53 ஆண்டுகள் காலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றவில்லை. இளைஞர்கள் 2 பேர் அங்கு சென்று கலாட்டா செய்ததை அடுத்து தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். ஜாதிகள் இல்லாமல் இருந்திருத்தால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருந்திருக்காது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சூத் திரர்கள் மற்றும் பெண்க ளுக்கு கல்வி கிடைக்கவில்லை. போலி பசவண்ணர் வந்த பிறகு கருநாடகத்தில் அனை வருக்கும் கல்வி கிடைக்க தொடங்கியது. 

தேசியக்கொடியை எதிர்ப் பவர்களிடம் தேசபக்தி இருக் குமா?. நாட்டிற்கு சுதந்திரம் காங்கிரஸ் கட்சியால் கிடைத் தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஏராளமானவர் கள் சுதந்திரத்திற்காக உயர்த் தியாகம் மற்றும் பொருட் தியாகம் செய்தனர். ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினர் நமக்கு தேப சக்தி குறித்து பாடம் நடத்து கிறார்கள். நாம் இன்று போலி தேபசக்தர்களின் வாயை மூட வேண்டும். பா.ஜனதாவினருக்கு ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது கவுரவம் இல்லை. இத் தகையவர்கள் தான் இன்று நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவுக்கு நாம் அ¬ னவரும் போராட தயாராக வேண்டும். நாட்டின் சுதந் திரத்திற்காக போராடிய நேரு 11 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn