தமிழ்நாட்டில் 525 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

தமிழ்நாட்டில் 525 பேருக்கு கரோனா

சென்னை, ஆக.29 தமிழ்நாட்டில் சில வாரங்களாக கரோனா குறையத்தொடங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழ்நாட்டில் மேலும் 525 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரத்து 160ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை596 ஆக உள்ளது. இதுவரை 35 லட்சத்து 23 ஆயிரத்து 858 பேர் குணமடைந் துள்ளனர். கரோனா பாதிப்பால்உயிரிழப்பு இல்லை.தமிழ்நாடு முழுவதும் 5,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment