சி.ஏ.ஏ. எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

சி.ஏ.ஏ. எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போராட்டம்

ஷில்லாங்க், ஆக.19 இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், வடகிழக்கு பகுதிகளில் சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

அசாம் அனைத்து மாணவர்கள் சங்கம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் வட கிழக்கு மாணவர்கள் அமைப்பு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. அசாம் மாணவர்கள் சங்கம் நடத்த இருந்த பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலில், வரும் நாட்களில் இதுகுறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக குடியே றியவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், அசாம் ஒப்பந் தத்தை அமல்படுத்துதல், தீவிர வாத தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து வடகிழக்கு மாநிலங் களில் இருந்தும் சிறப்பு ஆயுத படைச் சட்டம், அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள உள்நுழைவு சீட்டுத் திட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறுதல் போன்ற பிற பிரச்சினைகள் குறித்தும் போராட்டங்கள் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

அசாமில் கடந்த 2019ஆ-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட் டம் தொடங்கியது. அந்தப் போராட்டம், 2020-இல் கோவிட்-19 தொற்று பரவுவது வரை தொடர்ந்து நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 2019ஆ-ம் ஆண்டு டிசம்பர் 11ஆ-ம் தேதி இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 2014ஆ-ம் ஆண்டு டிச.31-க்கு முன்பாக ஆப்கானிஸ் தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய இந்துக் கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955இ-ல் சில திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தில் முஸ்லிம் களைப் பற்றி குறிப்பிடப்பட வில்லை என்பதால் சர்ச்சை ஏற்பட்டது.


No comments:

Post a Comment