துரித உணவில் உள்ள அபாயம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்போம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

துரித உணவில் உள்ள அபாயம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்போம்

சமீபத்தில் 18 வயது சிறுவனுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவரது பாட்டி ஒரு சிறுநீரகத்தைக் தானமாக கொடுத்த செய்தி நாளிதழ்களில் வந்தது. 

 1980 கள் வரை சர்க்கரை நோயாளிகள் என்றாலே அது செல்வந்தர்களின் நோய் என்ற நிலைதான் இருந்தது, 1990 களுக்குப் பிறகு பரவலாகி இன்று பள்ளிக்கூடம் செல்லும் சிறுவன் கூட சர்க்கரை நோய்க்கு இன்சுலின் மாத்திரை எடுக்கும் சூழல் வந்துவிட்டது. 

 இதற்கு காரணம் வாழ்வியல் மாற்றம் என்று பொதுவாக சொல்லிவிடுவார்கள். 

 ஆனால் அது உண்மை அல்ல, அவர்கள் உண்ணும் உணவில் உள்ளது இளவயது நோய்க்கான மூலப்பொருள்.

 இன்று பெரும்பாலான குழந்தைகள் பழங்கள் மற்றும் வீட்டிலே செய்யப்படும் சிற்றுண்டி வகைகளை உண்பது கிட்டத்தட்ட இல்லாமல் போய் வீடுகளில் பழங்கள் வாங்கு வதை மருந்துப்பொருள் வாங்குவது போல் ஆக்கிவிட்டார்கள் 

 அமாவாசை, பவுர்ணமி அன்று சாமிக்குப் படைக்க பழங்கள் வாங்கும் அவலம் நகரங்களில் பெருகிவிட்டது. 

 ஆனால் காலை முதல் மாலைவரை குழந்தைகளின் உணவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் கட்டாயம் இடம் பெற்று விடுகிறது. 

முக்கியமாக கவர்ச்சிகரமான வண் ணங்களில் வரும் பாக்கெட்டுகளைப் பார்த்த வுடனே குழந்தைகள் கேட்கும் விதமாக கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ளது. 

 அரசும்  "ஜங்புட்" எனப்படும் உடலுக்கு  தீமை  விளைவிக்கும் உணவுப்பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதைத் தவிருங்கள் என்று தொடர்ந்து விளம்பரம் செய்தும் பள்ளிகளில் பாடங்களாக வைத்தும் உள்ளது, ஆனால் அந்த பொருட்களின் விற்பனை அமோகமாக உள்ளது. விளைவு முதியவயதில் வரும் நோய் குழந்தைப் பருவத்திலேயே வந்துவிடுகிறது. 

 இந்த பாக்கெட் உணவுப்பொருட்களில் காரச்சுவை மற்றும் உப்புச்சுவைக்கான வேதிப்பொருட்கள் கலக்கப் படுகிறது. 

 அந்த வேதிப்பொருட்கள் தான் நமது உணவு மண்டலத்தை பாதித்து சுரப்பிகளின் செயல்பாட்டை குழப்பி நீரழிவு நோய், பார்வைக் குறைபாடு, ஒவ்வாமை, உடல் பருமன் போன்றவற்றை உருவாக்கி விடுகிறது. 

அந்த வேதிப்பொருட்களில் முக்கியமான ஒன்று அஜினோமோட்டோ.

அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!

பொதுவாக எல்லா வகை உணவுகளிலும், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...

அதை லேசாக தூவி  விட்டாலே, சுவை இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக பயன்படுத்தினால்  வயிறு வலிக்கும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறோம், அதாவது  அதன் உண்மையை நமக்கு அறியாமல் வைத் துள்ளார்கள். அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல.

அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர்  Monosodium glutamate ( MSG )  என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் நின்று கொல்லும் நச்சு என்கிறார்கள்.. ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்ற ஜப்பானிய முறை மருத்துவம் பார்ப்பவரால் 1917இல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி (Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான்  monosodium  ஆகும்..

முதலில் கிகுனே இகெடா, 1909இல் அவர் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில், அதனை மருந்தாக பயன்படுத்தி வந்தார்..பிறகு உணவுகளில் சேர்த்து, அதில் ருசி கூட்டப்பட்டு இருந்ததை அறிந்து பிறகு, அதனை உபயோகித்து Seasoning, cooking oil, sweetener, amino acids  வரை தயாரித்து,

பின் Pharmaceutical  துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார். முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.

ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கை கோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற் சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த monosodium    உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர். Glutamate என்பது ஒரு அடிமைப் படுத்தும் காரியமாகும்..

ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் போதைப் பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்.முதலில் இந்த glutamate  அய் உபயோகித்து, Artificial Sweetener செயற்கை இனிப்புச்சுவை கொண்ட  Aspartame அய் தயாரித்து வந்தனர். பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன் படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்.. சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங் களிலும், இதனை ருசிகூட்டப் பயன்படுத்தாதவர்கள் இல்லை..

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழ்நாட்டில் ரசம் வரை இதை  தூவ ஆரம்பித்து விட்டார்கள்...

சரி இதை நாம வாங்கி பயன்படுத்த வேண்டாம் என நினைத்து புறக்கணித்தாலும், நாம் உபயோகிக்கும் அத்தனை வகையான பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களிலும், இது மறைமுகமாக கலக்கப்பட்டுள்ளது..

அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள்...

அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா அய்ட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா,

சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi  மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,

அதனால் தான் இந்த Lays, Kurkure  வகையறாக்களை உண்ணும் நம் பிள்ளைகள் அதற்கு அடிமையாகிறார்கள்.

உண்பதால் வரும் பக்க விளைவுகள்

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி

2.Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது. நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம். உடல் எடை கூடினால், தானாக நீரிழிவும், இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. அய்ந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும். இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nervous System  என்கிறார்கள்.

5. இதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும்,  சிலரது முகம் கறுத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்தக் கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration  என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..

 நான் பாக்கெட் சிற்றுண்டி வகைகளைச் சாப்பிடுவது கிடையாது. ஆகவே என்று நீங்கள் நினைக்கலாம்.  ஆனால் காலையில் நீங்கள் பல்துலக்க கையில் எடுக்கும் பற்பசையில் உள்ள லேசான உப்புச் சுவையுடன் கூடிய இனிப்புச்சுவை வருவதற்கு அஜினமோட்டாதான் பயன்படுத்தப் படுகிறது நிறுவனங்கள் இதை மறுத்தாலும் வேறு உருவத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

No comments:

Post a Comment