சென்னை, ஜூலை 5- பாலி டெக்னிக் முடித்து பணி யில் உள்ளவர்கள் பகுதி நேர பி.இ., படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் விண்ணப்பிக் கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தொழில் நுட்பக்கல்வி இயக்கு நரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத் தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல் லூரிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்குத் தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து, பணிபுரி யும் விண்ணப்பதாரர்க ளுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்கூர், கோயம்புத் தூர், சேலம், திருநெல் வேலி ஆகிய அரசினர் பொறியியற் கல்லூரிகளி லும், காரைக்குடி அழ கப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரி ஆகியவற்றில் சேரலாம். விண்ணப்பதா ரர் விண்ணப்பிப்பதற் கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிற வராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணி புரிந் திருந்தவராகவோ இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணைய தளம் மூலம் ஜூலை 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் மட்டுமே விண்ணப்பித் தல் வேண்டும். பதிவுக் கட்டணத்தை விண்ணப் பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
இணையதள வசதி இல்லாத விண்ணப்பதா ரர்கள் விண்ணப்பப் படி வத்தினை இணையதளம் மூலமாக பதிவு செய்வ தற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மய்யத்தினை பயன் படுத்திக் கொள்ளலாம். அனைத்து TFC மையங் களிலும் போதிய அள வில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.
இந்த கல்வியாண்டில் பகுதிநேர பி.இ. பட்டப் படிப்பு கலந்தாய்வு இணை யதளத்தின் மூலமாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தின் மூலமாகவும், 0422-2590080, கைப்பேசி எண். 9486977757 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்’ என அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment