இதுதான் கடவுள் ச(ப)க்தி! அமர்நாத் "புனித" யாத்திரையாம் - 40க்கும் மேற்பட்ட பக்தர்களை காணவில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

இதுதான் கடவுள் ச(ப)க்தி! அமர்நாத் "புனித" யாத்திரையாம் - 40க்கும் மேற்பட்ட பக்தர்களை காணவில்லை!

பாகல்கோட், ஜூலை 10 ஜம்மு காஷ் மீரில் உள்ள அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மரணமடைந் தனர் 40 க்கும் மேற்பட்ட பக்தர்கள்  காணாமல் போனார்கள்.  இதனால் பலி எண் ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 இந்த நிலையில், உயிர்ச் சேதம் குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சிறப்பு மீட்பு உபகரணங் களுடன் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

 அமர்நாத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ அதிகாரிகள் கூறிய தாவது: இரவு முழுவதும், ராணுவ அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத் தனர். அமர்நாத் குகை இருக்கும் வெளிப் பகுதியில்  கூடுதல் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப் பட்டன. இரவு தெளிவான பார்வைக்கான சாதனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் கொண்ட ஒன்பது கண்காணிப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டனர்.

இரண்டு உயிர்ப்பொருட்களை உணரும் ரேடார்கள் மற்றும் இரண்டு மீட்பு நாய் படைகளும் மீட்பு நட வடிக்கைக்காக  கொண்டு செல்லப்பட் டன.  இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களும் அமர்நாத் குகை யில் பாதிக்கப்பட்டவர்களை வெளி யேற்றுவதற்காக கொண்டு செல்லப் பட்டுள்ளன. 

 இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, குகை இருக்கும் வெளி பகுதியில் இரவு தரையிறக்கம் தோல்வி யடைந்தது. மீட்பு மற்றும் மருத்துவ முயற்சிகள் விடியற்காலையில் தொடர்ந்தன.

காலை 6.45 மணியளவில், காய மடைந்தவர்களை வெளியேற்றத் தொடங்குவதற்கு முதல் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கியது. மொத்தம் 15 உடல்கள் மற்றும் 63 காயம் பட் டவர்களை   வெளியே எடுக்கப்பட்டனர். இராணுவம் மற்றும் சிவில் ஹெலி காப்டர்கள் இரண்டும் காயமடைந்த வர்கள் மற்றும் இறந்தவர்களை வெளி யேற்ற இடைவிடாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  மொத்தம் 28 பேர் பாதிப்பு பகுதியிலிருந்து நிலக் ரருக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளனர். பின்னர், 11 பேர் சிவில் ஹெலி காப்டர்களில் சிறீநகருக்கு சிகிச் சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.   வழித் தடம் சேறும் சகதியுமாக இருப்பதால், சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்களை இந்திய ராணுவ வீரர்கள் பால்டால் வரை அழைத்துச் சென்றனர்.பலி யானவர்களின் உடல்கள் சிறீநகருக்கு கொண்டுவரப்படுகிறது. அமர்நாத் சென்றுள்ள பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும்  ராணுவம் உறுதி செய் யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன.


No comments:

Post a Comment