சென்னை, ஜூலை 11 தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,537 பேர் கரோ னாவால் பாதிக் கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ் நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 2,537 -ஆக உள்ளது
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,819-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கரோனா பாதிப்பு 804-ஆக உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,028 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,560 பேர் குணமடைந்துள்ளதாக நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment