தமிழ்நாட்டில் 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு.! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

தமிழ்நாட்டில் 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு.!

சென்னை, ஜூலை 11 தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,537 பேர் கரோ னாவால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ் நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 2,537 -ஆக உள்ளது

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,819-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கரோனா பாதிப்பு 804-ஆக உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,028 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,560 பேர் குணமடைந்துள்ளதாக நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment