இலங்கை: அதிபரை விட நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

இலங்கை: அதிபரை விட நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம்

கொழும்பு, ஜூன் 29 இலங்கை நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2015இல், இலங்கையின் அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் அதிபரை கொண்டு வரும் வகையில், அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தத்தை செய்தார். இந்த சட்டத்தை, 2020இல் அதிபர் கோத்தபய ராஜபச்சே ரத்து செய்து, அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்தினார்.

இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடிக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் காரணம் எனக் கூறி, மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அதிபரின் அதி காரத்தை குறைத்து, அவரை நாடாளுமன்றத்தின் கீழ் செயல்பட வைக்கும் அரசியல் சாசனத்தின், 21ஆவது சட்டத் திருத்த மசோ தாவை எதிர்க்கட்சியான சமாகி ஜனா பாலவேகயா தாக்கல் செய் தது. இந்த மசோதா சட்ட வடிவம் பெறுவதற்கு முன், பொது வாக் கெடுப்பு நடத்த, இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில், அரசியல் சாசனத்தின் 22ஆவது சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. அதிபரை நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அதி காரத்தை வழங்கும் இந்த வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, செய்தி தொடர்பாளர் பண்டுலா குணவர்த்தனா தெரிவித்து உள்ளார். இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.


No comments:

Post a Comment