நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன் 29   முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.6.2022) (செவ் வாய்க் கிழமை) தலைமைச் செயலகத்தில், நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணி களுக்காகத் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையை நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ண மூர்த்தியிடம் வழங் கினார். 

இவ்வரசு பொறுப்பேற்றதும், முடிவு றாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணி களுக்காக ரூ.25 லட்சம் முதல்-அமைச்சரால் 10.12.2021 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக் கையினை ஏற்று, கட்டடப் பணிகளுக்காக மேலும் ரூ.50 லட்சத்துக்கான காசோலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங் கப்பட்டது. அவ்வகையில், நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம் பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டு உள்ளது. நிகழ்ச் சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செய லாளர் மகேசன் காசி ராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனை வர் அருள் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment