இந்தியா முழுவதும் 14,506 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

இந்தியா முழுவதும் 14,506 பேருக்கு கரோனா

புதுடில்லி, ஜூன் 29 இந்தியாவில் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது கரோனா பாதிப்பு அதி கரித்துள்ளது. 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சகம் இன்று (29.6.2022) காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 506 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது நேற்றைய பாதிப்பான 11 ஆயிரத்து 793-அய் விட அதிக மாகும். இதனால், நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்க பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 11 ஆயிரத்து 574 பேர் குணமடைந் துள்ளனர். 

இதனால், இந்தியாவில் கரோ னாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக் கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குத லுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், இந்தியாவில் கரோ னாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரத்து 138 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப் பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment