சென்னை, ஜூன் 22 பல்துறை மண் டலக் குழுக்கள் அமைத்து, புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந் திரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது;- "ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ் நாட்டிற்கு, 336 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது.
இந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக, தமிழ் நாட்டில் நேற்று (21.6.2022) வரை 65.7 மி.மீ. மழை பதி வாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும 85 விழுக்காடு கூடுதல்ஆகும். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கன மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட் டத்திற்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்கப்பெறும் என்ற நிலையில் கடந்த 19.6.2022 அன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையை விட மிக மிக அதிகம் ஆகும். தமிழ்நாட்டில், பரவ லாக பெய்து வரும் கனமழை யின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, தொடர்புடைய மாநகராட்சி களும், மாவட்ட நிர்வாகங் களும் மேற்கொண்டு வருகின் றன. பொதுமக்கள் மழை வெள் ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மய்யம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப் பாட்டு மய்யங்களை 1070 மற்றும் 1077 என்ற கட்டண மில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
இதுமட்டுமின்றி, 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும், ஜிழிஷிவிகிஸிஜி செயலி மூலமாகவும் பொது மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். மேலும், சென்னை மாநகராட்சி பகுதி களில் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். பாதிப்பிற்குள் ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்."
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment