டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வேலைக்கான அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு - வடமாநிலங்களில் போராட்டம் வெடித்தது: பீகாரில் ரயில்களுக்கு தீ வைப்பு; அரியானாவில் துப்பாக்கிச்சூடு.
உ.பி.யில் புல்டோசார்மூலம் வீடுகள் இடிப்பு விவகாரம்: சட்டத்தைப் பின்பற்ற அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்கு நரகம் அழைப்பாணை அனுப்பியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததற்கு மாற்றாக உ.பி.யில் புல்டோசர் அரசியலை எதிர்த்து காங்கிரஸ் போராடியிருக்க வேண்டும் என பத்திரிக்கையாளர் சுகாஸ் பல்சிகார் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஜேடி-யு நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா வியாழனன்று, 'அக்னிபாத்' திட்டம் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
தி டெலிகிராப்:
நேர்காணல் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும், எட்டு அய்அய்டிகளுக்கு இயக்குநர்களை மோடி அரசு இன்னமும் நியமனம் செய்யாததற்கு, காவி சித்தாந்தந்திற்கு இணங்கும் அதிகாரிகள் கிடைக்கவில்லையோ என பலரும் சந்தேகிக்கின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
அக்னிபாத் திட்டம் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என பாஜக எம்.பி. வருண் காந்தி ராஜ்நாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment