டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
உ.பி. கான்பூர் மத வெறி பேச்சு தொடர்பாக எழுந்த வன்முறையில் ஈடுபட்டதாக இஸ்லாமியர் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து வரும் யோகி அரசை கட்டுப்படுத்தக் கோரி ஜாமியத் உலாமி ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு.
சனாதனம் பற்றி பேசி தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். என்பதை ஆளுநர் நிரூபித்துள்ளார், தொல்.திருமாவளவன் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
புஞ்சி கமிஷன் பரிந்துரையை ஏற்று மேற்கு வங்க சட்டப் பேரவையில் மாநில அரசு நடத்தும் பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு அரசு வேலைகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தி டெலிகிராப்:
நேற்று (13.6.2022) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 78.27 என வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
இலங்கை - அதானி விவகாரம்: மோடியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறிய இலங்கை அதிகாரி பதவி விலகினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
அடிப்படை வரலாற்றை யாராலும் எப்படி மாற்ற முடியும்? அமித்ஷாவின் கருத்துக்கு நிதிஷ்குமார் பதிலடி.
சனாதன தர்மத்தை புகழ்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு திமுக கடும் கண்டனம்..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment