உள்ளடங்கிய வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

உள்ளடங்கிய வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன்28- கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண் டும் என்றும் கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகா ரத்தில் இருக்க வேண்டும்; அப் போதுதான் உள்ளடங்கிய வளர்ச் சியைப் பெற முடியும் என்றும் மேனாள் ஒன்றிய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்தார். 

அனைத்து இந்திய தொழில் முறை காங்கிரஸ் அமைப்பு சார்பில், ‘காங்கிரஸ் எக்னாமிக் மாடல்' என்னும் கருத்தரங்கம் சென்னையில் 25.6.2022 அன்று நடைபெற்றது. அதில் மாநிலங் களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசிய தாவது: 

31 ஆண்டுகளாக இந்தியா உலகளாவிய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டுள் ளது. 1991-இல் இருந்து இந்திய பொருளாதாரம் வளர்ந்துள் ளது. உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாதாரக் கொள்கை தீர்மானமும் அடங்கும். 1991-ஆம் ஆண்டு மார்ச்சில் தெளிவாக புதிய பாதை கிடைத்தது. 31 ஆண்டுக்குப் பின்னால் பார்த்தால், நாட்டின் எதிர்பார்ப்பு, மாற்றம் தெளிவாகத் தெரியும். நாடு அடைந்த நன்மைகள் இந்தப் பாதையில் தெரியும், நாட்டின் வளம், வளர்ச்சி, தனிநபர் வருமானம் அதிகரித்தது. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 4 முறை உயர்ந்தது. 2004,2014-இல் மிக நெருக்கமாக சராசரி வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது. 3 முதல் 4 ஆண்டுகளில் 9 சதவீ தத்தை எட்டி யது. உலக வங்கி கணக்கின்படி, சுமார் 230 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து முன் னேறினர். ராணுவம் என்பது திறனை மேம்படுத்தும் திட்டம் கிடையாது. அக்னி வீரர்களாக வெளியே வருபவர்கள் முடி திருத் துவோர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, துணி துவைப்ப வர்களாக மாறப் போகிறார்கள். 

எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். 8.72 லட்சம் இடங்கள் ஒன்றிய அரசு பணிகளில் காலியாக உள் ளன. ஆனால், 10 லட்சம் பணி இடங்கள்   உருவாக்கப்பட்டுள்ள தாகக் கூறுகின்றனர். ஆயிரக்கணக் கான வேலைகளை உருவாக்க முடியும். எங்களுடைய முக்கிய இலக்கு இதுதான். கல்வி மாநிலப் பட்டியலுக்குச் செல்லவேண்டும். கல்விக்காக மாணவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ள டங்கிய வளர்ச்சியைப் பெற முடியும். தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும். அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே அளவீட்டில் குறைந்த தொகையில் ஜி.எஸ்.டி வசூலிக் கப்படுவதாகத்தான் நாங்கள் உருவாக்கினோம். தற்போதுள்ள ஜி.எஸ்.டி. நாங்கள் உருவாக்கிய ஜி.எஸ்.டி. கிடையாது. - இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment