கொழும்பு, ஜூன் 6 இலங்கை அதிபரின் அதிகாரங்களை பறிக் கும் அரசியல் சாசன திருத்த மசோ தாவிற்கு, அமைச்சரவைக் கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா-20 ஏ நிறைவேற்றப்பட் டது. அதன்மூலம் நாடாளு மன்றத்துக்கு கூடுதல் அதிகா ரங்களை வழங்கிய அரசியல் சாசன திருத்தம் 19-ஏ செல்லாமல் போனது. தற்போது கடும் பொரு ளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வரு கிறார்கள். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக கடந்த 12-ஆம் தேதி அய்க்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து இலங்கையில் அதிபரின் மட்டற்ற அதிகாரங் களைப் பறித்து, நாடாளுமன்றத் துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21ஆ-வது திருத்தம் கொண்டு வரப்படும் என்பது முக்கிய அறிவிப்பாக வெளியானது.
இந்த நிலையில், 21ஆ-வது அரசியல் சாசன திருத்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சரவைக் கூட்டத் தில் இன்று (6.6.2022) அந்த மசோ தாவிற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. இதுபற்றி அந்த நாட்டின் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே மேலும் கூறியதாவது:- இந்த அரசியல் சாசன திருத்தம் தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் கடந்த வாரம் விவாதிக்கப்பட்டது.
விவாதத்தில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, வெளியுறவு அமைச் சர் ஜி.எல்.பெரீஸ் ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர். அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று வரைவு மசோதா, அரசி தழில் வெளியிடப்படும். அடுத்த வாரம் இது குறித்து நாடாளு மன்றத்தில் அறிக்கை அளிக்கலாம் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த அரசியல் சாசன திருத்த மசோதா, நாடா ளுமன்றத்துக்கு அதிபரை கட்டுப்பட்டவர் ஆக்கும், தேசிய கவுன்சிலும் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டதாகும், இதே போன்று 15 கமிட்டிகளும், மேற்பார்வை கமிட்டியும் கூட நாடாளுமன்றத் துக்கு கட்டுப்பட வேண்டியதாகி விடும்.
No comments:
Post a Comment