தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அரசின் அணுகுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அரசின் அணுகுமுறை

 சென்னை,ஜூன்6- தமிழ்நாடு முழுவதும் அய்ந்து வயது நிறைவ டைந்த குழந்தைகள் அனைவரையும், அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கை: அய்ந்து வயது பூர்த்தி அடைந்த, அனைத்து குழந்தைகளை யும், அரசுப் பள்ளிகளில் சேர்க்க, முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில், தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை, பொது மக்கள் அறியும் வகையில், வண்ண, 'பேனர்'கள் வைப்பதுடன், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில், ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதை எடுத்து ரைத்து, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை, கோடை விடுமுறை இறுதியில், பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடத்த வேண்டும். ஒற்றை இலக்கத் தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி யாற்றி, மாணவர்கள் எண்ணிக் கையை உயர்த்த வேண்டும். அங்கன் வாடி குழந்தைகளில், அய்ந்து வய தானோரை கண்டறிந்து அவர்களை யும், பள்ளிகளைச் சுற்றியுள்ள குடி யிருப்புகளில் உள்ள குழந்தைகளை யும் கண்டறிந்து சேர்க்க வேண்டும்.

ஊக்கப் பரிசு வழங்குவதன் வழியே, மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று, அரசுப் பள்ளி களின் சாதனைகள், கட்டமைப்பு வசதிகள், நலத் திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் குறித்து, பெற் றோரிடம் எடுத்துக் கூற வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு சார் பில், பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்த லாம். நூறு சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் அலு வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 

-இவ்வாறு சுற்றறிக்கையில் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment