சென்னை, ஜூன்.24 தமிழ்நாட்டில் மெட்ரிக் குலே ஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது.
பொதுப் பிரிவில் 31 சதவீதம், எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம், பிசிஎம் 3.5 சதவீதம், பிசி 26.5 சதவீதம் இடஒதுக் கீட்டை பின்பற்ற அமைச் சகம் ஆணை பிறப்பித் துள்ளது. மதிப்பெண் அடிப் படை யில் மட்டுமே பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான பட்டி யல் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.
மேலும், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன் மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மேல் நிலைக்கல்வி மாணவர் சேர்க் கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின் பற்றப்பட வேண்டும். 11ஆம் வகுப்பு சேர்க் கையில் ஒவ்வொரு பாடப்பிரிவில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கவேண்டும் .மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment