தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

சென்னை, ஜூன் 24 தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்குப் பிறகு 1,063 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக் கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:- 

புதிதாக 22 ஆயிரத்து 757 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

 இதில் ஆண்கள் 510 பேரும், பெண்கள் 553 பேரும் உள்பட 1,063 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 125 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

 இதில் அதிகபட்சமாக சென்னையில் 497 பேர், செங்கல் பட்டில் 190 பேர், திருவள்ளூரில் 63 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 3 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 199 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

 சிகிச்சையில் 5 ஆயிரத்து 174 பேர் தமிழ்நாட்டில் எந்த மாவட் டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கரோனா தொற்றால் உயிரிழந் துள்ளனர். மேலும்  5 ஆயிரத்து 174 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 472 பேரும், செங்கல் பட்டில் 948 பேரும், திருவள்ளூரில் 273 பேரும், கோவையில் 264 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழ் நாட்டில் 284 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 567 பேர் கரோனா நோயில் இருந்து குண மடைந்து 'வீடுதிரும்பி உள்ளனர்.

இதுவரை தமிழ்நாட்டில் 34 லட்சத்து 20 ஆயிரத்து 931 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.


No comments:

Post a Comment