ஏட்டு திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

பிற சமூகத்தை விட எண்ணிக்கையில் குறைவாக உள்ள இந்துக்களுக்கு சிறுபான்மை தகுதி வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வர ஒன்றிய அரசுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்குகிறோம் என உத்தரவிட்டு, விசார ணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் தற்போதைய நிலைப்பாடு என்ன? தேஜஸ்வி கேள்வி.

மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலை ஓபிசி பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் நடத்திட உச்ச நீதிமன்றம் ஆணை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்திட அவசர சட்டம் இயற்றிட வேண்டும், ஒன்றிய அரசுக்கு மகாராஷ்டிரா அமைச்சர் சக்கன் பூஜ்பால் வேண்டுகோள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக ஆர்ப் பாட்டம்  நடத்தும் சிறீராம் சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக்கை உடனடியாக கைது செய்க, ஜேடிஎஸ் தலைவரும் மேனாள் முதல்வருமான குமாரசாமி.

தி ஹிந்து:

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சட்டம் போன்ற கேவலமான மக்கள் விரோதக் கொள்கைகளை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து முன்வைத்தால், இலங்கையில் (பொது அமைதியின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி) என்ன நடக்கிறது என்பதை பன்முகத்தன்மை கொண்ட இந்தியா விரைவில் காணும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டி.

தி டெலிகிராப்:

இந்தியாவின் இஸ்லாமிய வரலாற்று கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் பன்மைத்துவ மதிப்புகளை சீர்குலைக்கும் சமீபத்திய தந்திரமாக புதிய அமைப்பினை சங் பரிவார் துவங்கியுள்ளது என்கிறது தலையங்க செய்தி.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment