அரியலூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 15, 2022

அரியலூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர், மே 15- அரியலூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் அரிவன்  இளைஞரணி ஏற்பாட் டில்  செந்துறையில் அருணா பார் வதி மகாலில்  நடைபெற்றது. 

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை யேற்க, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பா ளர் இரா.குணசேகரன், மாநில இ.அ.செயலாளர் த.சீ. இளந்திரை யன், மாநில மாணவர் கழக அமைப் பாளர் செந்தூரப்பாண்டியன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

 நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகம் இளைஞரணி மாநாட்டிற்கு திமுக இளைஞரணி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை அழைக்க வலியுறுத்தி பேசி னார். தந்தை பெரியார் காலத்திற் குப் பிறகு மாநில மாநாடு அரியலூ ரில் நடப்பது இதுவே முதல்முறை ஆகும். மிக  பிரம்மாண்டமாக இளைஞர் அணி சீருடை அணி வகுப்பு, சமூகப்பணி அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் என முழு நாள் மாநாடாக நடத்து வது என தீர்மானிக்கப்பட்டது. உலகின் சிறந்த பகுத்தறிவு ஏடான விடுதலைக்கு அறுபதினாயிரம் சந்தா ஆகஸ்டில் வழங்குவது என வும் தீர்மானிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மண்டலத் தலை வர் பொறியாளர் கோவிந்தராஜ், செயலாளர்  சு மணிவண்ணன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரைசாமி, மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயங்கொண்ட காம ராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய இளைஞரணி, மாணவர் கழக  திராவிடர் கழக பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment