மயிலாடுதுறை, மே 15- மயிலாடுதுறை மாவட் டத்தில் பெரியார் நகர்வு புத்தக விற் பனை 13.5.2022 வெள்ளி மற்றும் 14.5.2022 சனிக் கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றது.
13.5.2022 வெள்ளிக்கிழமை சீர்காழி யில் நடைபெற்ற புத்தக விற்பனை நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன் தலைமையேற்க மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் முன்னி லையில் மாவட்ட அமைப்பாளர் ஞான. வள்ளுவன் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைச்செயலா ளர் அரங்க. நாகரத்தினம் வரவேற்றார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வு மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தலைமை யில் மாவட்ட துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம் முன்னிலையில் திமுக மாநில தேர்தல் பணிக்குழு செய லாளர் குத்தாலம் பி.கல்யாணம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், பகுத்தறிவாளர் கழக தோழர் ஆறாமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இரண்டுநாள் நிகழ்விலும் மயிலாடு துறை நகர தலைவர் சீனி.முத்து, துணைத் தலைவர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலை வர் ஆர்.டி.வி.இளங்கோவன், சீர்காழி நகர தலைவர் சபாபதி, ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், செயலாளர் கடவாசல் செல்வம், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி.ஆர்.பாண்டியன், செயலா ளர் பூ.பாண்டுரங்கன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித் தனர். இரண்டுநாளும் மழை மிரட்டி னாலும் பல்வேறு இயக்கத்தினரும், பொது மக்களும் ஆர்வத்தோடு புத்தகங் களை கூட்டம் கூட்டமாக வந்து நின்று வாங்கிச்சென்றது காண்போரை வியக்க வைத்தது.
No comments:
Post a Comment