தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்பு ரயில்வேயில் ஹிந்தி வார்த்தையை நீக்கிய ரயில்வே நிர்வாகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்பு ரயில்வேயில் ஹிந்தி வார்த்தையை நீக்கிய ரயில்வே நிர்வாகம்

புதுடில்லி. மே 16 ரயில்வே இணைய தளத்தில் உடல் ஊனமுற்றோரைக் குறிக்க மோடி அறிமுகப்படுத்திய திவ்யங்ஜன் (புனிதமானவர்கள்) என்ற ஹிந்தி வார்த்தையை மாற்றுத்திறனாளி நபர் என்று மாற்றம் செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கையை இந்திய ரயில்வே ஏற்று விரைவில் மாற்றம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினராக உள்ள மருத்துவர் செந்தில் குமார் திமுகவில் இருந்தாலும், கட்சி வேறுபாடியின்றி தன்னிடம் நாடி வரும் நபர்களை அரவணைத்து உதவி செய்து வருகிறார். தன்னுடைய தொகுதி மட்டுமின்றி நாடாளுமன்ற அவை, சமூக வலைத்தளங்களில் கருத்துவெளியிட்டு வருபவர் செந்தில் குமார்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் களின் செயல்பாடுகள் குறித்து மதிப் பிடும் பி.ஆர்.எஸ் இந்தியா தரவுபடி, 17-ஆவது மக்களவை தொடங்கியது முதல் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் வரை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் வெளியிடப் பட்டுள்ளன. அதில், தருமபுரி மக் களவை உறுப்பினர் செந்தில்குமார் 386 புள்ளிகளுடன் தேசிய அளவில் 18-ஆவது இடத்திலும், தமிழ்நாடு அளவில் முதலிடத்திலும் உள்ளார். இதே நிலையில் நீடித்தால் சிறந்த மக்களவை உறுப்பினருக்கான ’சன்சத் ரத்னா’ விருது பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பாக செயல்பட்டு வரும்  செந் தில்குமார், தனது தொகுதி மட்டு மின்றி தேசிய அளவில் மாபெரும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். அது என்னவென்றால், இந்திய ரயில்வே துறையின் இணையதளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பய ணச்சீட்டு அறிவிப்பு குறித்த விவ ரங்கள் திவ்யங் ஜன்  என்ற இணைப் பின் கீழ் உள்ளது.

முழுவதும் ஹிந்தி பதம் கொண்ட இந்த வார்த்தையை தென் மாநில மக்கள் உச்சரிக்கவே முடியாத அளவில் உள்ளது. அதோடு, சமூக நீதி கொள்கையின் படி இதனை Persons with Disabilities (மாற்றுத்திறனாளி நபர்) என்று மாற்றம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்ற இந்திய ரயில்வே விரைவில் அதற்கான மாற்றம் செய்யவுள்ளதாக நாடாளு மன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த தகவலை அறிந்த பலரும்  நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு டிவிட்டர், பேஸ்புக் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, ஹிந்தியை ஒழித்த  நாடா ளுமன்ற உறுப்பினர் என்று பலரும் புகழாராம் சூட்டி வருகின்றனர்.


No comments:

Post a Comment