தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, மே 16 தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும், என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான அசானி புயலுக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.   இதற்கிடையே சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மேலும்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்கள், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 19ஆம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.


No comments:

Post a Comment