பா.ஜ.க. அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது : சித்தராமையா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

பா.ஜ.க. அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது : சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, மே 16 ராஜஸ் தானில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க கரு நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறிய தாவது:-

“பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்து விட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சியில் 5.37 மட் டுமே இருக்கிறது. இந்த விவ காரம் குறித்து காங்கிரஸ் கூட் டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தற்போது இருக் கும் பொருளாதார கொள் கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், தற்போது இருக்கும் கொள்கையால் தான் பொரு ளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.

நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண் டாட்டம் அதிகரித்துள்ளது. கருநாடக அரசியல், சட்டசபை தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

No comments:

Post a Comment