திருவண்ணாமலை, மே 14- பெங்களூ ருவில் இளம்பெண்மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவானவர் திரு வண்ணாமலையில் காவியாடையை உடுத்திக்கொண்டு சாமியாராக தியா னத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப் பட்டார்.
கருநாடக மாநிலம் பெங்களூரு விலுள்ள சுங்கத்கட்டே பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 28). இவர் ஆயத்த ஆடை துணியகம் நடத்தி வந்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரு கிறார். அந்த பெண்ணை ஒரு தலை பட்சமாக நாகேஷ் காதலித்து வந்து உள்ளார். அந்த பெண் வேலைபார்க்கும் அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாகேஷ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 28.4.2022 அன்று காலை நாகேஷ் அந்த தனியார் நிதி நிறு வனத்திற்கு சென்று மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட்டை நாகேஷ் இளம் பெண்ணின் முகத்தில் வீசினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின் னர் அப்பெண்ணை அருகிலிருந்தவர் கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.
இதற்கிடையில் நாகேஷ் அங்கி ருந்து தப்பியோடினார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கருநாடக காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். நாகேஷை பிடிப்பதற்காக கருநாடக காவல்துறை யினர் 4 தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை காவல்துறையினரின் விசா ரணையில் நாகேஷ், திருவண்ணா மலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சாமியார்களுடன் சாமியாராய் காவி உடை அணிந்து சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் திருவண்ணாமலையில் கடந்த ஓரிரு தினங்களாக முகாமிட்டு நாகேஷ் குறித்து விளம்பர சுவரொட் டிகள், துண்டறிக்கைகளை ஒட்டி தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவர் செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்திற்கு சென்று வந்தது தெரியவந்தது. அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி தியானத்திற்குச் சென்று வந்ததையும் தனிப்படை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கருநாடக காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்துப் பிடிக்க திட்டம் தீட்டி, நேற்று முன்னாள் (12.5.2022) மாறுவேடத்தில் அந்த ஆசிர மத்தின் அருகில் ரகசியமாக நின்று கண்காணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் நாகேஷ் காவி உடைந்த அணிந்தபடி தியானத்தில் ஈடுபடுவதற் காக ஆசிரமத்திற்குள் வந்தார். பின்னர் அங்கு தியானத்தில் ஈடுபட்டு கொண் டிருந்த நாகேஷை கருநாடக காவல் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித் தனர். பின்னர் அவரை கைது செய்து கருநாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment