பெங்களூரு,மே14-பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதமாற்றம் செய்வதற்கு எதிராக ஏற்கெனவே சட்டங்கள் உள்ளது. தற்போது சிறுபான்மையினத்தவரை மிரட்டுவதற்காகவும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவும் மத மாற்றத்துக்கு எதிராக அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவதாக அறிவித் துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் தான் சிறுபான்மையினருக்கு எதிராக வன் முறைகள், அவர்களது தார்மீக உரிமை களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது நடந்து வருகிறது.
இதற்கு இந்த நாடே சாட்சியாக இருக்கிறது. கருநாடகத்தில் கிறித்தவ தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதல், மாநிலத்திற்கே பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது. தற்போது அவசர கதி யில் சிறுபான்மையினருக்கு எதிராக பாரதீய ஜனதா அரசு எடுத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தான் மதமாற்ற அவசர சட்டமாகும்.
இந்த மதமாற்ற அவசர சட்டத்திற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கக் கூடாது. இந்த அவசர சட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சிறுபான்மையினரை மிரட்ட வேண்டும், அவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும், இதன்மூலம் அரசியல் செய்ய வேண்டும் என்பதே பா.ஜனதா அரசின் நோக்கமாகும். சுய மாக ஒருவர் வேறு மதத்தை நாடி செல் லலாம் என்று அரசமைப்புச் சட்டத்தி லேயே கூறப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் புதிதாக மதமாற்றத்துக்கு அவசர சட்டம் தேவை?.
பாரதீய ஜனதா அரசு அமைந்ததில் இருந்து மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எந்த துறைகளிலும் ஊழல் மட்டும் தான் நடக்கிறது. காவல்துறை துணை ஆய் வாளர் தேர்வு, பிற தேர்வு முறைகேடுகள் நடக்கிறது. இவற்றையெல்லாம் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார் கள். மக்களை திசை திருப்ப வேண்டும், தங்களது அரசின் ஊழல், பிற முறை கேடுகளை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக மதமாற்றத்துக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வருகிறது.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
No comments:
Post a Comment