சந்திரனில் தண்ணீர் உண்டா என்ற அய்யம் விலகி, இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அடுத்து, அங்கு எப்படி நீர் வந்தது என்ற ஆராய்ச்சி நடக்கிறது.
அதில், ஒரு கருத்து வித்தியாசமானது. நிலாவில் இருக்கும் நீரில் ஒரு பகுதியாவது நம் பூமியிலிருந்து போயிருக்கவேண்டும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமியின் பரந்து பட்ட வளிமண்டலத்தில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் அயனிகள் உள்ளன.
இவை, புவி காந்த மாறுபாடுகளால் சில நேரங்களில் கசிந்து, நிலாவை நோக்கிச் சென்று, அங்கே நீர் திவலைகளாக மாறி சாரல் போல விழக்கூடும் என அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment