பளு தூக்கும் ட்ரோன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

பளு தூக்கும் ட்ரோன்

இப்போது ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களான ட்ரோன்களுக்குள் ஒரு பளு தூக்கும் போட்டியே நடக்கிறது. அண்மையில், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கைச் சேர்ந்த புளோகாப்டர் என்ற ட்ரோன் நிறுவனம் ஒரு கன ரக ட்ரோ னை உருவாக்கி உள்ளது. இது ஆறு மணி நேரம் தொடர்ந்து பறந்து 900 கி.மீ., தொலைவைக் கடக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமல்ல, சோதனைகளில் 95 கிலோ எடை வரை சுமந்து சென்றுள்ளது. இறுதி வடிவில், அது 150 கிலோ எடை வரை தூக்கும் திறனுடன் இருக்கும் என புளோகாப்டரின் வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


No comments:

Post a Comment