நீட் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீதான வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

நீட் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீதான வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மே19-  நீட் தேர்வு சம்பந்தமாக சமயநல்லூர் அரசுப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை, சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். இவர் தன்மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2020 செப்டம்பர் 8ஆம் தேதி கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி  சமய நல்லூர் அரசுப் பள்ளி முன்பு நீட் தேர்வு  குறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக என் மீது  சமயநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்ப் பாட்டத்தின் போது எந்த ஒரு பொது சொத்தும் சேதப் படுத்தப்படவில்லை, அமைதியான முறையில் அரசு விதித்துள்ள வழி காட்டுதலின்படியே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எனவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு 16.5.2022  அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனு தாரர் மீது சமய நல்லூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment