காங்கிரஸ் உறுப்பினர் சட்டசபைக்குள் நுழைய எதிர்ப்பு: மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் ஹிந்துத்துவ அமைப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

காங்கிரஸ் உறுப்பினர் சட்டசபைக்குள் நுழைய எதிர்ப்பு: மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் ஹிந்துத்துவ அமைப்பினர்

ஹிசார், மே 10- அரியானா சட்டசபைக்குள் நுழை யக் கூடாது என்று பசு பாதுகாவலர்கள் எச்சரித் ததாக பெரோஸ்பூர் ஜிர் காவைச் சேர்ந்த காங்கி ரஸ் சட்டமன்ற உறுப்பி னர் மம்மன் கான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடு மாறு அரியானா முதல மைச்சர், உள்துறை அமைச் சர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகி யோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக கூறி னார். மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக் கும் ஏதேனும் நேர்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு என்று கூறி னார்.பசுபாதுகாவலர் கள் என்ற பெயரில் ஆயு தம் ஏந்தி நாசவேலையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று மம்மன் கான்  கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துத்துவ அமைப்பினர் மிரட்டல் விடுக்கும் வகையில் காணொலி ஒன்று வெளி யானது.

இந்த நிலையில் மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள கான், “மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாது காப்பு இல்லை என்றால், சாமானியர்களின் நிலையை நீங்களே எண் ணிப் பாருங்கள். நாச வேலை மற்றும் ஆயு தத்தை கையில் ஏந்தும் அதிகாரம் என்று கூறிய தில் என்ன தவறு இருக் கிறது ?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நான் மாநில அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளேன், எனக்கோ அல்லது எனது குடும் பத்தினருக்கோ ஏதேனும் நடந்தால், அரசுதான் பொறுப்பாகும்”, என்றார்.

இதுகுறித்து நூஹ் நகர துணை ஆணையர் அஜய் குமார் கூறியதா வது “நாங்கள் இரு சமூ கத்தினரிடமும் பேசியுள் ளோம், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படா மல் பார்த்துக்கொள் வோம்” என்று கூறினார்.

No comments:

Post a Comment