சென்னை, மே12- தமிழ்நாட்டில் பீடி சுற்றும் தொழி லாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தித்தரவேண்டும் எனும் கோரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டிலுள்ள பீடி நிறுவனங்களில் பணியாற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உ.லட்சுமிகாந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதையடுத்து, 10.5.2022 முதல் சாதா பீடிக்கு அடிப்படை ஊதியம் 119.80 ரூபாய் அகவிலைப்படி 128.01 ரூபாய் சேர்த்து, 247.81 ரூபாய் வழங்கப்படும். ஜாடி பீடிக்கு அடிப்படை ஊதியம் 120 ரூபாய் அகவிலைப்படி 128.01 ரூபாய் சேர்ந்து, 248.01 ஒரு பைசா பணப்பலன்கள் கிடைக்கும். இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தத்தின்மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஓர் இலட்சத்து 78 ஆயிரம் தொழி லாளர்கள் பயனடைகிறார்கள்.
No comments:
Post a Comment