பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி

 ஆந்திர மாநில முதலமைச்சருக்கு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பாராட்டு

அய்தராபாத், மே 18- அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் தலைவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ் ணய்யாவை ஆந்திர மாநிலத்தின் மாநிலங் களவை உறுப்பினராக அம்மாநில முதல மைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

அம்மாநிலத்தின் சார்பில் முதலமைச் சரால் மாநிலங்களவை உறுப்பினராக அறி விக்கப்பட்ட  நால்வரில் ஆர்.கிருஷ்ணய்யா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட சங்கத்தின் தலைவரை மாநிலங்களவை உறுப்பினராக அறிவித் துள்ள ஆந்திர முதலமைச்சருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment