அஞ்சல் துறையில் 38,926 காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

அஞ்சல் துறையில் 38,926 காலிப் பணியிடங்கள்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு -  விண்ணப்பிக்க ஜூன் 5 கடைசிநாள்

இந்திய அஞ்சல்துறையில் கிராம அஞ்சல்பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், கிளை உதவி போஸ்ட் மாஸ்டர்) பதவியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 4310, மத்தியப்பிரதேசம் 4074, ஒடிசா 3066, மகாராட்டிரா 2984, கர்நாடகா 2410, கேரளா 2203, ராஜஸ்தான் 2390, உ.பி., 2519, குஜராத் 1901, மேற்கு வங்கம் 1850, ஆந்திரா 1716, சத்தீஸ்கர் 1253, தெலுங்கானா 1226, அசாம் 1143, இமாச்சல் 1007, பீகார் 990, பஞ்சாப் 948 உட்பட மொத்தம் 38,926 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தாய்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது : 5.6.2022 அடிப்படையில் 18 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 5.6.2022

விவரங்களுக்கு : www.indiapostgdsonline.gov.in



No comments:

Post a Comment